பாதையில் மனிதர்களுக்கு தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த மரக் கிளையை அகற்றிய மனிதனை சுவர்க்க இன்பங்களை அனுபவிக்க கண்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி) நூல் : முஸ்லிம் 5107
வியாழன், 21 ஜூன், 2012
தினம் ஒரு ஹதீஸ் 2
பாதையில் மனிதர்களுக்கு தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த மரக் கிளையை அகற்றிய மனிதனை சுவர்க்க இன்பங்களை அனுபவிக்க கண்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி) நூல் : முஸ்லிம் 5107
குறிச் சொற்கள்
தினமும் ஒரு ஹதீஸ்,
மதாஸ் பதிவுகள்
புதன், 20 ஜூன், 2012
வீடு!
பறவைக்கு -
ஒரு கூடு!
விலங்குக்கு-
ஒரு காடு!
மனிதனுக்கு-
ஒரு வீடு!
அழியும்-
பட்டியலில்!
பறவைகள்!
விலங்குகள்!
மனிதர்கள்!
வேடிக்கை பார்க்குது-
பாதுகாக்க வேண்டிய-
நாடு!
இதை மறைத்துவிட்டு-
பொருளாதார வளர்ச்சின்னு-
பேசுவது-
வெட்ககேடு!
-----------------------------
மனைகள்-
இருந்தது-
மகிழ்ச்சியின் -
தொழிற்சாலையாக!
இப்போது-
அடித்துகொள்கிறார்கள்-
"அலை வரிசை"-
மாற்றுவதற்காக!
தொடர்களில் -
அழுவுபவார்கள்!-
காசை வாங்கி கொண்டு!
வீட்டுல உள்ளவங்க-
அழுவுறாங்க-
கேபிள் பணம்-
கட்டி கொண்டு!
போடுற நிகழ்ச்சியெல்லாம்-
கோடீஸ்வர நிகழ்ச்சி!
மக்களின் -
வாழ்வாதாரமோ-
அவலகாட்சி!
------------------------------
நேற்றைய அறிமுகங்கள்-
விருந்தினர் என்ற பேரில்-
நடு வீட்டிலே!
நாம் உலகிற்கு-
வர வழியானவள்-
செல்லமாய் வளர்த்தவள்-
செல்ல பிராணிக்கு-
அருகிலே!
--------------------------
கோடிகளை கொட்டி-
கட்டிய வீடானாலும்-
என்ன செய்ய முடியும்!
மழலையின் மொழி-
கேட்கவில்லை என்றால்-
பிச்சை பாத்திரம்-
ஆகி விடும்!
-------------------------
எத்தனை வேலையாட்கள்-
கவனித்தாலும்-
குழந்தைக்கு போதாது!
ஒரு தாயின் அன்புக்கு-
ஈடாகாது!
ப்ரியமுடன்-
சீனி ஷா.
தினமும் ஒரு ஹதீஸ்-1
(அல்லாஹ்வின்)அடியானுக்கும் இனை வைப்பு, இறைமறுப்பு இவற்றுக்கிடையில் (உள்ள வித்தியாசமாக) தொழுகை விடுவது உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்:ஜாபிர் (ரலி)
நூல் :முஸ்லிம் 134
குறிச் சொற்கள்
தினமும் ஒரு ஹதீஸ்,
மதாஸ் பதிவுகள்,
மற்றவை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)