வியாழன், 21 ஜூன், 2012

தினம் ஒரு ஹதீஸ் 2


பாதையில் மனிதர்களுக்கு தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த மரக் கிளையை அகற்றிய மனிதனை சுவர்க்க இன்பங்களை அனுபவிக்க கண்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்                               அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)   நூல் : முஸ்லிம் 5107

புதன், 20 ஜூன், 2012

வீடு!



பறவைக்கு -
ஒரு கூடு!

விலங்குக்கு-
ஒரு காடு!

மனிதனுக்கு-
ஒரு வீடு!

அழியும்-
பட்டியலில்!

பறவைகள்!
விலங்குகள்!
மனிதர்கள்!

வேடிக்கை பார்க்குது-
பாதுகாக்க வேண்டிய-
நாடு!

இதை மறைத்துவிட்டு-
பொருளாதார வளர்ச்சின்னு-
பேசுவது-
வெட்ககேடு!
-----------------------------
மனைகள்-
இருந்தது-
மகிழ்ச்சியின் -
தொழிற்சாலையாக!

இப்போது-
அடித்துகொள்கிறார்கள்-
"அலை வரிசை"-
மாற்றுவதற்காக!

தொடர்களில் -
அழுவுபவார்கள்!-
காசை வாங்கி கொண்டு!

வீட்டுல உள்ளவங்க-
அழுவுறாங்க-
கேபிள் பணம்-
கட்டி கொண்டு!

போடுற நிகழ்ச்சியெல்லாம்-
கோடீஸ்வர நிகழ்ச்சி!

மக்களின் -
வாழ்வாதாரமோ-
அவலகாட்சி!
------------------------------
நேற்றைய அறிமுகங்கள்-
விருந்தினர் என்ற பேரில்-
நடு வீட்டிலே!

நாம் உலகிற்கு-
வர வழியானவள்-
செல்லமாய் வளர்த்தவள்-
செல்ல பிராணிக்கு-
அருகிலே!
--------------------------
கோடிகளை கொட்டி-
கட்டிய வீடானாலும்-
என்ன செய்ய முடியும்!

மழலையின் மொழி-
கேட்கவில்லை என்றால்-
பிச்சை பாத்திரம்-
ஆகி விடும்!
-------------------------
எத்தனை வேலையாட்கள்-
கவனித்தாலும்-
குழந்தைக்கு போதாது!

ஒரு தாயின் அன்புக்கு-
ஈடாகாது!



ப்ரியமுடன்-
சீனி ஷா.

தினமும் ஒரு ஹதீஸ்-1


(அல்லாஹ்வின்)அடியானுக்கும் இனை வைப்பு, இறைமறுப்பு இவற்றுக்கிடையில் (உள்ள வித்தியாசமாக) தொழுகை விடுவது உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்                      


அறிவிப்பவர்:ஜாபிர் (ரலி)                         
 நூல் :முஸ்லிம் 134