இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23, 24, 25 மார்ச் 2013 (சனி, ஞாயிறு, திங்கள் ) ஆகிய தேதிகளில் இராமநாதபுரம் மாவட்டம் ஒப்பிலானில் மீலாது உள்ளிட்ட முப்பெரும் விழாவில்
வட்டார மக்தப் மதரசாக்களுக்கான
மார்க்க அறிவுப் போட்டியும் மாணவர் பட்டிமன்றங்களும்
உலமாக்கள் பங்குபெறும் நகைச்சுவைப் பட்டிமன்றமும் மிகச் சிறப்பாக நடைபெற வுள்ளன . இன்ஷாஅல்லாஹ் விழா சிறக்க அன்பர்கள் அனைவரும் துஆ செய்வீர்கள்தானே !
சில ஆண்டுகளாகவே பல்சுவைப் பட்டிமன்றம் சூடான விவாதம் சுவையான செய்திகளோடு நமது மதரசா ஆண்டு விழாவை நாம் நடத்தி வருகிறோம் ஆண்டுக்கு ஆண்டு புதிய புதிய நிகழ்ச்சிகளை நாம் அறிமுகப் படுத்துவதுண்டு . அந்த வரிசையில் இந்த ஆண்டு குன நலமா? பண பலமா ? என்ற தலைப்பிலும் டிவி யால் அதிகம் விளைவது நன்மையா? நாசமா? என்ற தலைப்பிலும் மாணவர் பட்டிமன்றங்கள் இரண்டும் ''மேடைக்கு மேலே மூளைக்கு வேலை'' என்ற புதிய பல்சுவை நிகழ்ச்சிகளோடு நமது மீலாது விழா சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஊர்வலம் துவங்கும் முன் மாணவர்கள் சீருடையுடன் அணிவகுத்து சென்று தலைவரிடம் தீன் கொடியைத் தர அதன்பின் ஊர்வலம் செல்லும் அமைப்பில் அருமையான அணிவகுப்பு ஒன்றும் நமது இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இதற்காக அன்றாடம் உழைக்கின்ற அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக ஆமீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்