நமது ஒப்பிலான் கிராமத்தில் இயங்கி வந்த ஒப்பிலான் நர்சரி & பிரைமரி பள்ளி இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டிலிருந்து யாசீன் நர்சரி & பிரைமரி பள்ளியாக புதுப் பொலிவுடன் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் மேற்பார்வையில் நல்ல பல திட்டங்களுடன் சிறப்பாக இயங்கும் என்று அதன் நிறுவனர் அறிவித்துள்ளார்.
பள்ளியின் சிறப்பம்சங்கள்:
குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச எழுத பயிற்சி
காற்றோட்டமான வசதியான வகுப்பறைகள்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி
அனுபவமிக்க அன்பான ஆசிரியைகள்
குழந்தைகளை அக்கறையுடன் கவனித்துக்கொள்ள உதவியாளர்கள்
மார்க்க கல்வி, கராத்தே, ஓவிய வகுப்புகள்
spoken English, Hand Writing வகுப்புகள்
மாணவர்கள் ஓடியாடி விளையாட விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய விளையாட்டு மைதானம்
அறிவுத் திறனை வளர்த்துக்கொள்ள அழகிய நூலகம்
நமது பள்ளிக்குள் நடைபெறும் போட்டிகளிலும் மற்ற பள்ளிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகளிலும் பங்கெடுத்துக்கொள்ள பயிற்சி அளிக்கப்படும்
வாகனத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து வர வாகன வசதிகளும் உண்டு
நன்கொடை கிடையாது.
நிர்வாகம்: தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கீழக்கரை. தொடர்புக்கு: 9840757550
பஷீர் பாய் சலீம் பாயின் பரிதாபமான நிலை கண்டு இறங்குகிறார் அவர் சலீமை சந்தித்து பேசுகிறார்:
''சலீம் பாய்.. இப்ப நடந்த எல்லாத்தையும் நான் பார்த்துட்டுதான் இருந்தேன். ஒரு சமுதாயத்துல ஒரு சிலர் செய்யிறத வச்சு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தப்பா எடை போடக்கூடாது. உங்களுடைய மன உறுதியை நான் பாராட்டுறேன். உங்களுக்கு சம்மதம்னா உங்க பொண்ண எம் பையனுக்கு எடுத்துக்கிறேன். நயா பைசாக்கூட வேணாம். என்ன சொல்றீங்க?''
உன்மையாவா சொல்றீங்க?
''ஆமாங்க சலீம் பாய். மார்க்கமும் ஒழுக்கமும் உள்ள பொண்ணைத்தான் நான் தேடிக்கிட்டு இருந்தேன். உன்மையான வெற்றி அதுலதானே இருக்கு? நம்ம நபி (ஸல்) அவர்கள்கூட அழகாச் சொன்னாங்களே:
''பொதுவா பொண்ணு பார்க்குறவங்கபணத்தப் பார்த்து முடிக்கிறவங்களும் உண்டு;பரம்பரையப் பார்த்து முடிக்கிறவங்களும் உண்டு;அழகைப் பார்த்து முடிக்கிறவங்களும் உண்டு.ஆனாஒழுக்கத்தைப் பார்த்து முடிக்கிறவங்கதான் வெற்றி பெற முடியும் ''
அப்படின்னு சொன்னாங்க இல்லையா? அதனாலதான் உங்க பொண்ணை நான் தேர்ந்தெடுத்தேன். அதுமட்டுமில்ல.. புதுசா முஸ்லிமான உங்க குடும்பத்துல நான் பெண்ணெடுத்தா எனக்கு டபுள் நன்மை உண்டு. அது பெரும் பாக்கியம். அதனால கவலைப் படாதீங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்.
''ரொம்ப நன்றிங்க.. அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுசப் போட்டு வப்பான்''
காட்சி-8 (பஷீரும் மகன் அப்துல்லாஹ்வும்):
மகனே அப்துல்லாஹ். இங்கே வாயேன் ஒரு நல்ல செய்தி.
என்ன வாப்பா சொல்லுங்க
மகனே உனக்கு ஒரு நல்ல இடத்துல பொண்ணு பார்த்திருக்கேன்
வாப்பா.. இப்ப எதுக்கு எனக்கு கல்யாணம்?
என்ன ராசா இப்படி சொல்லுற? உனக்கு 24 வயசாச்சு.மூன்றாம் எட்டில் முடிக்காதது திருமணம் அல்ல என்று முன்னோர்கள் சொல்லியிருக்காங்க. நீ சரின்னு சொன்னா மேற்கொண்டு காரியத்தப் பார்க்கலாம். என்ன சொல்ற?
வாப்பா.. உங்க பேச்சுக்கு எப்ப நான் மறுபேச்சு பேசியிருக்கேன். நீங்க செய்தா அது சரியாத்தான் இருக்கும். ஆனா ஒரு விஷயம். நான் யாரைக் கல்யாணம் செய்யணும்னு நீங்க முடிவு பண்ணின மாதிரி கல்யாணம் எப்படி நடக்கணும்னு நான் முடிவு பண்ணுறேன்.. ஓகேயா?
ஓகே. சொல்லு எப்படி நடக்கணும்?
என்னோட கல்யாணம் முழுக்க முழுக்க சுன்னத்தான முறைப்படி நடக்கணும். வெள்ளியிலே ஜும்ஆ பள்ளியிலே....
அப்படின்னா என்ன? கொஞ்சம் விளக்கமா சொல்லுவேன்
பல நபிமார்களுக்கும் நல்லோர்களுக்கும் கல்யாணம் நடந்த வெள்ளிக் கிழமையிலே என்னோட கல்யாணமும் நடக்கணும். பெரிய அலங்காரத் தோரணமோ ஆடம்பரமோ இல்லாம பள்ளியிலே எளிமையா நடக்கணும். பத்திரிக்கைக்கூட அடிக்க வேணாம் வாப்பா.
பத்திரிக்கை இல்லாம எப்படிப்பா?
சரி. சிம்பிளா அடிங்க. ஆனா அந்த பத்திரிக்கையில மொய் வாங்குவதில்லை என்பதை முக்கியமா காட்டிடுங்க. அப்புறம் சுன்னத்தான தப்ஸ் ஊர்வலம் இருந்தா நல்லது. மத்தளம் கொட்டு இல்லாம ஆட்டம் பாட்டம் இல்லாம தாரைத் தப்பட்டைகள் கிழிந்து தொங்காம குடி கும்மாளம் இல்லாம நல்ல முறையில இருக்கணும்.
சரி.. அப்புறம்?
முகத்தையே மறைக்கிற அளவுக்கு மாலை போடாம சிம்பிளா ஒரே ஒரு மாலை போதும். மாப்பிள்ளை என்பதற்கு ஒரு அடையாளமாகவும் நறுமணமாகவும் இருக்கும். அதுமட்டுமில்ல.. மலர்கள் இருக்கும் சபையில் மன இறுக்கம் மன அழுத்தம் ஏற்படாது என்பது மருத்துவம். அதனால ஒரு ஒரே ஒரு மாலை போதும்.
சரிப்பா.. வீடியோவுக்கு சொல்லிரவா?
வீடியோவா? அறவே வேண்டாம். ஃபோட்டோ எடுக்கிறதப் பத்திக்கூட யோசிக்கணும் வாப்பா. ஏன்னா ஃபோட்டோ எடுக்கிற சாக்குல ஜமாத்த காக்க வச்சிரக்கூடாது. அதனால நிறைய பேரோட பொன்னான நேரமும் வீணாகி வேலையும் கெட்டுப் போயிடும். நம்ம சக்திக்கு தக்கவாறு ஒரு சில ஆடுகளையாவது அறுத்து வலீமா விருந்து கொடுத்துறணும். அதுல ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்துறணும். ஏன்னா ஏழைகளை விட்டு விட்டு பணக்காரங்களை மட்டும் கூப்பிட்டு கொடுக்கிற விருந்து தரங்கெட்ட விருந்து அப்படின்னு நம்ம நபி (ஸல்) சொல்லியிருக்காங்க.
சரி மகனே. நான் போயி ஆட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துர்றேன். இந்தா ஒரு 50,000 ஐ நீ வச்சிக்க.
அதில்லப்பா. எம் மகன் கல்யாணம். நிறைய பேர் வந்து வாழ்த்தணும்னு எனக்கு ஆசை இருக்காதா? இப்பவெல்லாம் 'தண்ணீ' வாங்கிக் கொடுத்தானே கல்யாணத்துக்கு வர்றாங்க?
அதுக்காக..? அனாச்சாரத்தை செய்யமுடியுமா? நல்லா சொல்றேன் கேட்டுக்குங்க. 'தண்ணீ 'வாங்கிக் கொடுத்தான் கல்யாணத்துக்கு வருவாங்கன்னா அப்படி ஒரு நட்பே எனக்குத் தேவை இல்லை. அவங்க வந்து வாழ்த்தித்தான் நான் வாழணும்னு அவசியமில்லை.
''வ அலைக்குமுஸ் சலாம் சலீம் பாய் இப்ப என்ன விஷயமா வந்தீங்க? அதேன் அன்னைக்கே சொன்னேன்ல. நமக்குள் சம்பந்தம் இல்லைன்னு. இப்ப எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு வந்தீங்க? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதாதா?''
கரீம் பாய்.. அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். எம் மக ஆயிஷாவுக்கு ஒரு நல்ல இடம் அமைஞ்சிருக்கு கைக்கூலி நயாப் பைசாக்கூட இல்ல அந்த கல்யாணத்துக்கு முதல் அழைப்பே உங்களுக்குத்தான். நீங்கதான் அதைத் தலைமை தாங்கி நடத்தி தரணும்.''
என்னது நானா? நிஜமாவா சொல்றீங்க?
ஆமா நிச்சயமா நீங்க கல்யாணத்துக்கு வரணும்.
ஆகா... சலீம் பாய் நீங்க நீங்கதான். என்ன பெருந்தன்மை உங்களுக்கு! உங்களை எப்படியெல்லாம் ஒதுக்கினேன்? நீங்க எவ்வளவு தூரம் என்னை மதிக்கிறீங்க?!
கரீம் பாய்.. என்னதான் இருந்தாலும் நீங்க எனக்கு வழிகாட்டி இல்லையா? நான் நரகத்தின் படுகுழியில் கிடந்தேன்; நீங்கதான் கைகொடுத்து கலிமா சொல்லிக் கொடுத்து சொர்க்கத்திற்கு சொந்தக்காரனாக மாத்துனீங்க. அதனால இந்த கல்யாணம் உங்க துஆவுலதான் நடக்கணும்.
''இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா வர்றேன்.''
அல்லாஹ்வின் கிருபையால் சலீமின் இல்லத் திருமணம் கரீம் பாய் தலைமையில் ஜமாத்தார்கள் புடைசூழ இனிதே நடந்தது..
மிக எளிமையாக!
வாங்க வாசகர்களே! நாமும் அந்த முன்மாதிரி திருமணத்தை வாழ்த்திட்டு 'வலீமா' விருந்தை ஒரு பிடி பிடிச்சிட்டு வருவோம்.
என்ன சலீம் பாய். நல்லா இருந்த நீங்க ரொம்ப டல்லா ஆயிட்டீங்களே என்ன விஷயம்?
அத ஏம்பா கேக்குறே. இந்த பொம்பளப் புள்ளகளைப் பெத்துட்டு வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு வாழவேண்டியதாயிருக்கு. அதுகள ஒரு நல்ல இடத்துல கட்டிக்கொடுக்கிறவரை நிம்மதியே இல்லப்பா.
ப்பூ.. இவ்வளவுதானா விஷயம். கவலையை விடுங்க; கண்ணீரைத் தொடைங்க. ஒங்க பொண்ணுக்கு பொருத்தமான எடத்த நான் காட்டுறேன். ஆனா என்ன கொஞ்சம் செலவாகும்.
எவ்வளவு செலவாகும்?
சும்மா ஒரு 2 லட்சமும் 20 பவுனும்
என்னது.. 2 லட்சமும் 20 பவுனா?
இப்படி வாயைப் பொளந்தா எப்படி கொமர கரையேத்துறது? நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க. நம்ம துரை இருக்கிறாரே. எவ்வளவு கேட்டாலும் தருவாரு. அவர்கிட்ட வட்டிக்கு வாங்கி காரியத்த கச்சிதமா முடிச்சிரலாம்.
என்னது.. வட்டிக்கு வாங்கியா? அவன்கிட்ட வட்டிக்கு வாங்குறதும் ஒன்னுதான்; என் குமரை வெட்டிப் பொதைக்குறதும் ஒன்னுதான். அவன்கிட்ட வட்டிக்கு வாங்கி என் காரியத்த நான் முடிச்சிருவேன்..நாளைக்கு அவன் வந்து ஊரைக் கிழிக்கவா? அதனால அந்த பேச்சே வேணாம்.
சரி அப்படின்னா பணத்துக்கு என்ன பண்ணப் போறீங்க?
ஏதோ தோது பண்ணுறேன்.. நீங்க ஆகவேண்டிய வேலையப் பாருங்க''
தரகர் செல்கிறார்.
(சலீம் பாய் தனக்குள்):
''பணத்துக்கு என்ன செய்யலாம்.. ஆங்.. ஜமாத்துல போய் உதவி கேட்டுப் பார்ப்போம்''
(சலீம் பாய் ஜமாத் நிர்வாகியைச் சந்தித்து...):
அஸ் ஸலாமு அலைக்கும்.
வ அலைக்குமுஸ் ஸலாம் வாங்க சலீம் பாய் என்ன விஷயம்?
ஒன்னுமில்ல.. ஒரு சின்ன உதவி
என்ன சம்பளத்த கூட்டணுமா?
அதெல்லாம் ஒன்னுமில்ல. எம் மகள் ஆயிஷாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்திருக்கேன். அடுத்த வாரம் கல்யாணம். எல்லாம் சேர்த்து ஒரு 7 லட்சம் செலவாகும். ஜமாத்திலிருந்து ஏதாவது உதவி செய்வீங்கன்னு வந்தேன்
சலீம் பாய்.. ஜமாத்திலிருந்து பெரிய உதவியெல்லாம் செய்ய முடியாது. வேணுமின்னா லட்டர் தாறோம். மக்கள்ட்ட கேட்டுப் பாருங்க; அப்படியே பக்கத்து ஊரு ஜும்ஆ வசூலையும் பாருங்க. இந்தாங்க லட்டர்.
லட்டரை கையில் வாங்கிக் கொண்டு கவலையுடன் சலீம் பாய்):
''ச்சே.. என்ன இது யாருட்டயும் கையேந்தாம எவ்வளவு கவுரமா வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். இந்த சமுதாயம் என்னை பிச்சை எடுக்க வச்சிருச்சே. சரி என்ன செய்வது. குமருகளைப் பெத்தாச்சு. எல்லாம் பட்டுத்தான் ஆகனும்''
(மக்களை நோக்கி சலீம் பாய் ):
''மக்களே! நான் ஒரு நவ் முஸ்லிம். இரண்டு குமர்களை வச்சிக்கிட்டு சிரமப் படுகின்றேன். உங்களின் உதவியை நாடி வந்திருக்கின்றேன். அல்லாஹ்வுக்காக தாராளமாக உதவி செய்யுங்கள்''
கூட்டத்திலிருந்து ஒரு குரல்:
''ஆமாடா. கிளம்பி வந்துட்டாங்கே. இவனுகளுக்கு இதே பொழப்பாப் போச்சு. வாரம் வாரம் வந்துர்றாங்கே. இதுக்குத்தான் பள்ளிக்கு வரவே பயமா இருக்கு வந்தா பாக்கெட்டுல இருக்குற பத்து ரூபாயையும் அப்பிக்கிட்டு வுட்டுர்றாங்கெ
யா அல்லாஹ் என்ன இது? குமரையும்கொடுத்துட்டு கேவலத்தையும் கொடுக்குறீயே.. இது நியாயமா? மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்னு சொல்லுவாங்களே.. இங்கே தண்ணீரைக் காணோமே. கண்ணீருதானே வருது?
(சலீம் பாய் தாங்கமுடியாத சோகத்துடன் பாடல் படித்துக் கொண்டே நடக்கிறார்:
பள்ளிவாசல் தோறும் தொடரும் குமருக்கான பிச்சைகள் தன்மானம் இழந்தழுகும் பெண்ணைப் பெற்ற நெஞ்சங்கள் திருமண சந்தையிலே மாப்பிள்ளைக்குப் பேரங்கள் கருவே கல்லறையாய் பெண்குழந்தை சிசுவுகள் புதிதாய் மார்க்கம் வந்த புது முஸ்லிம் குடும்பங்கள் திருமணச் சுமையாலே மதம் மாறும் அவலங்கள் கருணை தயாளனே இது என்ன கொடுமைகள் பரக்கத்தை தடை செய்யும் முசீபத்தின் அவலங்கள்
(எங்கள் திருமணத்தின்)
கஞ்சனும் காசை அள்ளி வீச வைக்கும் கல்யாணம் வட்டிக் கடன் பட்டு சொத்தை விற்க வைக்கும் கல்யாணம் சமூகத்தின் பொருள்வளத்தை நாசமாக்கும் கல்யாணம் தீமைக்கு தீமையாகி விளைந்து நிற்கும் கல்யாணம் வீண்விரைய செலவில் இறை சாபம் தேடும் கல்யாணம் கவுரவம் தற்பெருமை காட்ட நடக்கும் கல்யாணம் என்றுதான் தீருமோ இந்தபெரும் அலங்கோலம் என்றுதான் தீருமோ இந்தபெரும் அலங்கோலம்
(எங்கள் திருமணத்தின்)
சொர்க்கத்து பந்தமாகும் திருமணத்தின் உறவுக்கு நரகத்து வேதனையாய் சுட்டெரிக்கும் செலவுகள் மருந்துண்ண வைக்குகின்ற விருந்து முறைகேடுகள் கைக்கூலிக்கு கமிஷன் வாங்கும் கல்யாணத்து தரகர்கள் எளிமைத் திருமணங்கள் 'மஹர்' கொடுத்து நடக்கணும் இது ஒரு வணக்கம் என்ற உண்மைதனை உணரணும் வேதனைத் தீயில் வாடும் பெண்ணினத்தைக் காக்கணும் மார்க்கமும் மனசாட்சியும் இனியாவது ஜெயிக்கணும் (எங்கள் திருமணத்தின்)
காட்சி-6
சலீமின் சகோதரி மகன் கோபால் சலீமை நையாண்டி செய்கிறான்:)
மாமா. என்ன மாமா புலம்பிக்கிட்டு இருக்கீங்க. இப்ப பொலம்பி என்ன செய்ய? இதெல்லாம் மதம் மாறுவதற்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும். அந்த சமுதாயத்துலதான் வரதட்சணைக் கொடுமை அதிகமா இருக்குன்னு தெரியாதா? இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. நீங்க 'உம்' என்று ஒரு வார்த்தை சொல்லுங்க. ஆயிஷாவுக்கு நான் வாழ்க்கை கொடுக்கிறேன். மாமா என்னதான் இருந்தாலும் நான் உங்க முறைமாப்பிள்ளை இல்லையா. அந்த உரிமையிலதான் கேட்கிறேன். ஆயிஷாவை எங்கிட்ட விட்டுருங்க.அஞ்சு பைசா கூட வேணாம். என்ன சொல்றீங்க?
''டே கோபாலு. வார்த்தயை அடக்கிப் பேசு. எங்கிட்ட சன்மானம் இல்லாம இருக்கலாம்; ஆனா தன்மானம் நிறைய இருக்கு. எங்கிட்ட வசதி இல்லாம இருக்கலாம்; ஆனா உறுதியான ஈமான் இருக்கு. இன்னொரு தடவை இப்படி வந்து கேட்டே.. சொந்தக்காரன்னு கூட பார்க்கமாட்டேன்; வெட்டிப் பொதச்சிருவேன்.
''அட போய்யா.. நல்லதுக்கு காலமில்லே''
கோபால் ஓடிவிடுகிறான்.
''யா அல்லாஹ். என்ன ஒரு சோதனை? என் ஈமானுக்கே ஆபத்தா? இதுக்கு வேற வழியே இல்லையா?''