புதியவை

வியாழன், 31 மே, 2012

ஊரு கிணறு....



அதிகாலை-
'வயசு'புள்ளைகளுக்கு!

காலை-
வேளை-
பள்ளி புள்ளைகளுக்கு!

அதுக்கு பின்னே -
தாய் மார்களுக்கு!

முற்பகளுக்கு மேல்-
காலை' வேலை-'
போய் திரும்பியவர்களுக்கு!

மாலை -
வயது முதிர்ந்தவர்களுக்கு!

காலை நேர-
கால அட்டவணையே!

மறு பாகமும்-
தொடருமே!

'தேவைகளை-
தீர்த்திடும்-
கிணறுகள்!

அதில் அசுத்தம்-
செய்வதுதான்-
மனித புத்திகள்

கோடையில்-
மக்கள் கூடும்-
இடம்!

மழை காலங்களில்-
நாம் மறந்த-
இடம்!

'தேவைக்கு'-
திரும்பிவரும்போது-
'கடுப்பு'அடிப்பதில்லை-
கிணறுகள்!

நாம மறந்த-
ஊரு-
கிணறு!

நமக்கு மறுக்காம-
ஊறும்-
கிணறு....!!



ப்ரியமுடன்!
சீனி ஷா.

4 கருத்துகள்:

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்