மறைந்து ஓராண்டு ஆகியும் நினைவு நீங்கவில்லை.
மறைந்தது போன்றே தெரியவில்லை.
நடக்கும் பொழுதும் இருக்கும் பொழுதும் படுக்கும் பொழுதும் அவர் நம் கூடவே இருப்பது போல ஓர் உணர்வு.
நீண்ட காலமாக பள்ளிக்கூடத்திற்கு அருகில் கிடந்த பயங்கரமான பள்ளத்தை உடனடியாக மண்ணிட்டு மூடி மக்கள் நடந்து செல்ல நல்ல பாலம் அமைத்துக் கொடுத்தவர்.
மதரஸாவின் மேம்பாட்டிற்கு தேவையான நல்ல திட்டங்களை நாம் எடுத்துச் சொன்னால் உடனே வரவேற்பார். அதற்கான வசதிகளை உடனுக்குடன் செய்து தருவதில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார். மதரஸா மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை, பேக் , குறைந்த உயரம் கொண்ட தரமான டெஸ்க் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நாம் கூறியபோது அதை உடனே அமுல் படுத்தினார்.

வயது குறைந்த ஹாஃபிழ்களைக் கூட பாசத்துடனும் மரியாதையுடனும் ''ஹாஃப்ஸா'' ஹாஃப்ஸா'' என்று மூச்சுக்கு முன்னூறு முறை அவர் உதடு தித்திக்க உச்சரிக்கும் பொழுது நம் உள்ளமெல்லாம் குளிரும். நியாயத்தை உரத்து முழங்குபவர். அநியாயத்தை துணிந்து எதிர்ப்பவர்.
இதுபோன்ற தலைவர்களை இழந்தது ஒப்பிலானுக்கு ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
மண்ணின் மைந்தர்கள் வரிசைத் தொடர் இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்.
ஆமாம்! அசரத்!
பதிலளிநீக்குநல்ல மனிதர் மச்சான் காஜா அவர்கள்!
அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலிகளை வழங்குபவனாக!
நாம் எல்லோரும் அவர்களுக்காக -
துவா செய்வோமாக!
அசரத்!
உங்கள் முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது!
அன்புள்ள சீனி..
நீக்குஅவரைப் பற்றி நன்கு அறிந்தவர் நீங்கள்.
அவரைப் பற்றி ஒரு கவிதை எழுதுங்களேன்.
உண்மை உண்மை மறக்கப்பட முடியாத ஒரு உண்மை. சாச்சா காஜா மைதீன் அவர்கள் ஊருக்காக தன்னை தியாகம் செய்திருப்பது உண்மையே. அவர்களின் ஆயுள் காலத்தை ஊருக்காகவை கழித்தவர் அல்லாஹ் அவர்களின் பாவத்தை மன்னித்து அவர்களுக்கு சொர்க்கத்தை வழங்குவானாக ஆமின்.
பதிலளிநீக்குஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
நீக்குஅன்புள்ள சகுபர்,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
உங்கள் அனைவருக்கும் நன்றி........!
பதிலளிநீக்கு