ஜல்லிக்கட்டில்-
பரிசு-
தொங்குவது-
கொம்பில் !
வாழ்வின் வெற்றி-
தொங்குவது-
தோல்வியில்!
சிராய்வுகளை-
சந்திக்க துணியாதவன்-
"களத்தில்"-
இறங்காதே!
தோல்விகளை-
தாங்க முடியாதவன்-
வெற்றி என்று கூட-
சொல்லாதே!
---------------------
தோல்வி!
ஒரு தெரு நாய்-
ஓடினால்-
துரத்தும்!
"உறுதியா" நின்றால்-
திரும்பி ஓடும்!
-------------------
ஆழ்கடலுக்கு-
செல்பவனுக்கே-
முத்துக்கள்!
கரையே கதியென்றால்-
தொட்டிட முடிந்தவை-
நுரைகள்!
அலைகளை -
தாண்டினால்தானே-
சிப்பி!
தோல்விகளை-
ஏற்றுகொள்பவனுக்கே
வெற்றி!
---------------------
வெற்றி பெற்றவனின்-
தோள்கள் தாங்கலாம்-
மாலைகள் !
அம்மாலைகளை-
ஒதுக்கி -
அவனது நெஞ்சத்தை-
கேட்டு பார் அது சொல்லும்-
பட்ட அவமானங்களை!
------------------------
வெற்றி ஊராரை-
மெச்சிடவும் வைக்கும்!
வஞ்சிடவும்-
வழி வகுக்கும்!
தோல்வி-
வாட்டத்தையும் தரும்!
வாழ்கை பாடத்தையும்-
கற்று தரும்!
--------------------
சோதனை?-
எனும் கேள்வி குறியை!
சாதனை!-
என மாற்றிய-
ஆச்சரிய குறியை!
அவர்களில் ஒருவர்!
சிறு வயதில்-
தந்தையை இழந்தார்!
விடா முயற்சியில்-
கல்வியை தொடர்ந்தார்!
பட்டங்களையும்!
பாராட்டுகளையும்!-
பெற்றார்!
சிங்கையில் வழக்கறிஞராகவும்-
பணியாற்றினார்!
நிகழ்ச்சி- படைப்பாளர்!
நல்ல பண்பாளர்!
மறைந்த -
நம்மில் ஒருவர்!
உதுமான்கனி -
அவர்கள்!
ப்ரியமுடன்!
சீனி ஷா.
தோல்வி-வாட்டத்தையும் தரும்!
பதிலளிநீக்குவாழ்கை பாடத்தையும்-கற்று தரும்!
சரியாக சொன்னிர்கள்
Nantri nanpaa!
பதிலளிநீக்கு