புதியவை

செவ்வாய், 19 ஜூன், 2012

மண்ணின் மைந்தன் -தொடர்- 5 


பாறையினுள்ளேதான்-
சிற்பம்-தேவை இல்லாததை
ஒதுக்குவதே-
சிற்பியின் வேலை!

மாணவனுக்குள் தான்-
மாண்புகள்-
மேருகேற்றுவதுதான்-
ஆசிரியர் வேலை!

தன் பிள்ளையினுள்ளேதான்-
சிறந்த தலைவன்!-
சிறப்புகளை-
சீர் செய்வதுதான்-
பெற்றோர்களின் வேலை!


சிதிலமடைந்த சமூகத்தை-
சீரமைப்பதுதான்-
சீர்திருத்தவாதிகளின்-
வேலை!

வெளங்காத -
நாட்டு மக்களையும்-
துலங்கும் மக்களாக்குவதுதான்-
நாட்டு தலைவர்களின் -
வேலை!

வேலையை கடைமையேன-
செய்திட வேண்டும்!

கடமையை-
கண்ணின் இமையாய்-
பாதுகாக்க வேண்டும்!

வேலையை-
வேண்டா வெறுப்புடன்-
செய்பவன்-
"இருக்கும் வரை"-
நினைவில் இருக்கிறார்!

வேலையை கடமையாக-
செய்பவன்-
"இல்லாதபோதும்"-
நம் நினைவோடு -
இருக்கிறார்!

தவறுகளை -
தவறு என -
தெரியாமல் செய்பவர்களை-
விட!

தவறு இது என-
தெரிந்தவர்களும்-
வாய் மூடி இருப்பது -
கொடியது அதை விட!

மாற்றங்கள் தந்தவர்-
நம்மோட நெஞ்சங்களில்-
நிக்கிறார்!

நம்மால் "வெள்ளை அசரத்"-
என அழைக்கபட்டார்!

அசரத் அப்துல் மாலிக்-
அவர்கள்!
நமது ஊரை செதுக்கிய-
சிற்பிகளில் ஒருவர்!

ப்ரியமுடன்-
சீனி ஷா.

2 கருத்துகள்:

  1. வெள்ளை அசரத்- நம்
    உள்ளங்களை
    கொள்ளை கொண்டவர்
    அல்லவா?
    சீனி..
    அவர் செய்த சீர்திருத்தங்களை
    ஒரு கவிதியாக எழுதுங்களேன்

    பதிலளிநீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்