பாறையினுள்ளேதான்-
சிற்பம்-தேவை இல்லாததை
ஒதுக்குவதே-
சிற்பியின் வேலை!
மாணவனுக்குள் தான்-
மாண்புகள்-
மேருகேற்றுவதுதான்-
ஆசிரியர் வேலை!
தன் பிள்ளையினுள்ளேதான்-
சிறந்த தலைவன்!-
சிறப்புகளை-
சீர் செய்வதுதான்-
பெற்றோர்களின் வேலை!
சிதிலமடைந்த சமூகத்தை-
சீரமைப்பதுதான்-
சீர்திருத்தவாதிகளின்-
வேலை!
வெளங்காத -
நாட்டு மக்களையும்-
துலங்கும் மக்களாக்குவதுதான்-
நாட்டு தலைவர்களின் -
வேலை!
வேலையை கடைமையேன-
செய்திட வேண்டும்!
கடமையை-
கண்ணின் இமையாய்-
பாதுகாக்க வேண்டும்!
வேலையை-
வேண்டா வெறுப்புடன்-
செய்பவன்-
"இருக்கும் வரை"-
நினைவில் இருக்கிறார்!
வேலையை கடமையாக-
செய்பவன்-
"இல்லாதபோதும்"-
நம் நினைவோடு -
இருக்கிறார்!
தவறுகளை -
தவறு என -
தெரியாமல் செய்பவர்களை-
விட!
தவறு இது என-
தெரிந்தவர்களும்-
வாய் மூடி இருப்பது -
கொடியது அதை விட!
மாற்றங்கள் தந்தவர்-
நம்மோட நெஞ்சங்களில்-
நிக்கிறார்!
நம்மால் "வெள்ளை அசரத்"-
என அழைக்கபட்டார்!
அசரத் அப்துல் மாலிக்-
அவர்கள்!
நமது ஊரை செதுக்கிய-
சிற்பிகளில் ஒருவர்!
ப்ரியமுடன்-
சீனி ஷா.
வெள்ளை அசரத்- நம்
பதிலளிநீக்குஉள்ளங்களை
கொள்ளை கொண்டவர்
அல்லவா?
சீனி..
அவர் செய்த சீர்திருத்தங்களை
ஒரு கவிதியாக எழுதுங்களேன்
insha allah!
நீக்குezhuthukiren!