முகவை மாவட்டம் ஒப்பிலானைச் சேர்ந்த இரண்டு மாணவிகளுக்கு ஏர்வாடி மக்தூமிய்யா பெண்கள் அரபிக் கல்லூரியில் 'முபல்லிகா' பட்டம் வழங்கப்பட்டது.
1. ஜனாப் சீனி முஹம்மது அவர்களின் புதல்வி நஃபீஸத்துல் மிஸ்ரிய்யா
2. ஜனாப் சீனி சம்சு அவர்களின் புதல்வி சம்சு நிஸா
இவர்கள் இருவரும் ஏர்வாடி மக்தூமிய்யா பெண்கள் அரபிக் கல்லூரியில் கடந்த மூன்று வருடங்களாக 'முபல்லிகா' பாடப்பிரிவில் பயின்று வந்தனர். அவர்களுக்கும் அவர்களோடு பயின்ற மற்ற சில மாணவிகளுக்கும் இன்று (15-07-2012) அந்த கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் முபல்லிகா' பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதில் நம் ஒப்பிலான் ஜமாத்தார்களும் பெண்களும் உறவினர்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். அதைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் நம் ஊர் ஹிதாயத்துன்- நிஸ்வான் மகளிர் மதரஸாவில் அந்த இளம் ஆலிமாக்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பெற்றோர்களுக்கு பரிசு வழங்கியும் கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் நன்றாக செய்திருந்தனர். அல்ஹம்து லில்லாஹ்.
கண்ணியத்திற்குறிய இளம் ஆலிமாக்களே!
மதரசா சூளையில்
மலர்ந்த செங்கற்கள் நீங்கள்.
நீங்கள் அடிக்கல்லாக
அடுக்கப் படவில்லையானால்
இறையச்சக் கோட்டை
எழுவது எப்படி?
உங்களைக்
கண்ணியப் படுத்தும் போதெல்லாம்
நாங்கள்
புண்ணியப் படுத்தப் படுகிறோம்.
maasha allaah!
பதிலளிநீக்குnantri asarath!
சீனி
நீக்குஉங்கள் வரவுக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி.