புதியவை

திங்கள், 30 ஜூலை, 2012

யார் பிணங்கள்....!?



கும்பகோணத்தில்-
கொடூர சம்பவம்-
நடந்தேறியது!

ஒரு "பூவின்" மீது-
பேருந்து-
ஏறி இறங்கியது!

"தீர்ப்பு" சொன்னதுக்கு-
கல்லூரி மாணவிகள்-
எரிப்பு!

"கருத்து கணிப்பு"-
வெளியிட்டதுக்கு-
ஊழியர்களோட-
எரிப்பு!

இத்தகைய தொண்டர்கள்-
கொண்ட கட்சிகள் -
மாறி மாறி ஆளும்-
அரசியல் நடப்பு!

"ரத்த யாத்திரை"-
புகழ்!

"ரத்த காட்டேரி"-
புகழ்!

"இதுகளுக்கு"-
நாட்டை ஆளும்-
ஆசைகள்!

கணிக்கலாம்-
இவ்வாறு-
யாரால் நடந்தது-
அதிக கொலைகள்!

அவருக்கே கொடுக்கலாம்-
"சீட்டுகள்"!

யாரோ செய்த பாவத்திற்கு-
யாரையோ கொல்லும்-
பாவிகள்!

ஆயிரக்கணக்கில்-
கொலைகள் "பார்த்தும்"-
பதவி ஆசைகொண்ட-
படுபாவிகள்!

எத்தனை-
போலி தாக்குதல்கள்!

உயிர் போன பிறகே-
விசாரணைகள்!

இருந்தது-
முள்ளி வாய்க்காலாய்!

மாறியது-
கொலைகளின் கால்வாயாய்!

காஷ்மீரத்து மக்கள்-
காட்டு மிராண்டி-
அடக்குமுறைகள்!

ஆண் பெண்-
நட்பை பயன்படுத்தி-
"நாசம்"செய்யும்-
நாய்கள்!

பெண்களின் அங்கங்களை-
படம் பிடித்து-
பகிர்ந்து கொள்ளும்-
கொடூரர்கள்!

உலகில் -
பசி தெரியாமல் -
சில நூறு பேர்கள்!

உணவே -
தெரியாதவர்களோ-
பல கோடிகள்!

அகிலத்தில்-
அறிவியல் வளர்ச்சிக்கு-
பஞ்சமில்லை!

அன்புக்குத்தான்-
இடமில்லை!

அணு குண்டுகளுக்கோ-
குறைவில்லை!

இத்தனையவும் பார்த்து -
உணர்வற்று இருப்பவர்கள்-
உயிருள்ளவர்களா!?

உணர்ச்சியற்று-
உணர்வற்று கிடக்கும்-
நாங்கள் பிணங்களா!?

இப்படியெல்லாம்-
கேட்பவர்கள்!

மயான காட்டில்-
அநியாயமாக கொல்லப்பட்டு-
"அடக்கப்பட்டவர்கள்!"

ப்ரியமுடன்-
சீனி ஷா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்