பொத்தி வளர்த்த புள்ளை-
போதையில கிடக்குறான்-
தெரு நாயோட!
கூன் விழுந்த முதுகோட-
தாயானவள் -
தேடி அலைகிறாள்-
கவலை தோய்ந்த முகத்தோட!
அரசோ !-
"விற்றதை" சாதனையாக-
சொல்லுது-
பந்தாவோட!
சட்டமே சொல்லுது-
குற்றம் நிரூபிக்கும் வரை-
"ஒருவன்"குற்றவாளி-
இல்லை-என!
ஊடகங்கள் ஊளையிடுது-
அவனை தீவிரவாதி-
என!
"அதிகாரிகள் "சொல்வதையெல்லாம்-
வெளியிடுவதற்கு!
தட்டச்சு இயந்திரம் -
போதும் -அதற்க்கு!
"பத்திரிக்கை "என்ற-
பேர்-எதற்கு!?
"வேஷம்" கட்டுபவர்கள்-
பிறந்தநாளுக்கு-
சுற்றுலா போய்டுவார்-
வெளி நாட்டுக்கு!
"வேலை வெட்டி "இல்லாமல்-
"இவன்"கொண்டாடுறான்-
கொடுமைக்கு!
உண்ணா விரதம்-
இருக்காங்களாம்!
காரணம்-
"அவரு" படம்-
நடிக்கலையாம்!
நடித்தால் அவருக்கு-
காசு!
வேலைக்கு போனால்தான்-
உனக்கு அடுத்த வேலை-
சோறு!
"முட்டிகொள்வார்கள்-"
ஒரு வயித்தில் பிறந்தவர்கள்-
வாழும்போது!
முட்டி முட்டி அழுவார்கள்-
யாராவது ஒருவர்-
"தவறி" விட்ட போது!
தனி தொகுதி-
கொடுத்தாச்சி!
"தனி" குவளை முறை-
மாறிடிச்சி!!?
எவ்வளவோ -
அவலங்கள் -
ஒவ்வொரு நாளும்!
"அவை" அலைக்கழிக்குது-
என்னையவும்!
ஆற்று மணலில்-
சட்டை இல்லாமல்-
படுத்தும்!
வானத்தை வெறித்தே-
பார்த்தும்!
தூக்கம்தான்-
வரவில்லை!
"துரத்திய எண்ணங்கள்"-
எழுதும்வரை-
விடவில்லை!
ப்ரியமுடன்-
சீனி ஷா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்