புதியவை

புதன், 11 ஜூலை, 2012

மௌனங்கள்"!


ஊதாரி பேச்சி-
உருப்படாத பேச்சி!

ஆத்திரக்காரன் பேச்சி-
அரை புத்தி பேச்சி!

அறிவாளியின் மௌனமோ-
அறிவின் முதிர்ச்சி!
------------------------------
கடலின் அலை-
ரசனை தரும்!

கடலின் மௌனமோ-
புயலை தரும்!
------------------

மொட்டுக்கள் மௌனம்-
களைவது-
மலர்வதற்கு!

மலைகள் மௌனம்-
களைவது!-
நில சரிவிற்கு!

பனி மலை மௌனம்-
களைவது-
கடல் மட்டம்-
கூடுவதற்கு !

அநீதியை கண்டும்-
பொங்கிடாதவன்-சமம்
பிணத்திற்கு!
-------------------
யோகியின் -
மௌனம்-
தியானம்!

"தியான பீடத்தில்"-
தீஞ்ச வாசம்-
காமம்!
------------------
ப்ரியமுடன்-
சீனி ஷா

2 கருத்துகள்:

  1. ஆகா..
    பின்னிப் பெடலெடுக்கிறீங்க
    சீனிஷா.
    தொடருங்கள் உங்கள்
    பதிவுகளை.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்