வந்த-
"வழியும்"!
தங்கிய-
"அறையும்"!
பால்கொடுத்த-
மார்பும்!
வளர்த்த -
சொந்தங்களும்!
அமுதூட்டிய -
கைகளும்!
பாசம் தந்த-
மனங்களும்!
எல்லாமே -
ஒண்ணுதான்!
பெற்ற பிள்ளைகளிடமோ-
குணநலன்களோ-
வேறுதான்!
நம்மோடு பிறந்து-
வளர்ந்தவர்களிடமே -
"மாறு பாடுகள்"-
என்றால்!
வரும் மருமகள்-
நம்மை போலவே-
எப்படி இருப்பாள்!?
அவள்-
பிறந்ததும்!
வளர்ந்ததும்!
பழக்க வழக்கமும்!
பேச்சு முறையும்!
வேறு பாடாக-
இருந்திருக்கும்!
இரு வேறு-
உறவுகள்!
எப்படி உடனே-
காண முடியும்-
மாற்றங்கள்!
"வந்தவள்"-
வீட்டுக்கு வந்த-
வேலைக்காரி அல்ல-
அவள்!
வாழ வந்த-
வம்ச விருத்திக்கு வந்த-
உறவு அவள்!
கணவன் -
மனைவிகளுக்கிடையே-
பிரச்சனைகள்-
குறைவு!
"இவர்களின்"உறவுகளுக்கிடையே-
பேராசைகள்தான்-
நிறைவு!
"உங்கள் "குடும்பங்களின்-
பேராசையால்!
வாழ வேண்டிய-
இரு உள்ளங்கள் வாட வேண்டுமோ-
நிராசையால்!
ஊரான் பிள்ளையை-
"ஊட்டி"வளர்த்தால்-
தன் பிள்ளையை-
"கொடைக்கானல்"வளர்க்குமா!?-என
கேட்க கூடாது!
கர்பவதியான-
மருமகளை-
ஊட்டி வளர்த்தால்-
அவள் வயிற்றில் உள்ள-
நமது உயிர் வளர்வதை-
மறந்திடலாகாது!
வாழ்வில் இரணம்-
கூடிடவும்!
ஆயுள் கூடிடவும்-
உறவுகளுடன்-
சேர்ந்து வாழுங்கள்!
நபி மொழியே!
இதை விட -
எந்த வார்த்தைகள்-
எழுதி உறவின் மேன்மையை-
நான் மொழிய..!!?
ப்ரியமுடன்-
சீனி ஷா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்