படைத்தவனே!
பரிபாலிப்பவனே!
உணர்ச்சி வெளிப்பாடாய்-
மானுட உற்பத்திக்கு-
வழி வகுத்தாய்!
உணர்வுள்ள மனிதனுக்கு-
"அளவோட" உணர்ச்சி-
வெளிக்காட்ட -
"வழி காட்டி"தந்தாய்!
வெள்ளத்தை -
அணை போட்டு தடுக்காவிட்டால்-
ஊருக்கு ஆபத்து!
"தடுத்தே" வைத்தால்-
அணைக்கு ஆபத்து!
அளவாக திறந்து விட்டால்-
அணையும் பிழைக்கும்!
நாடும்-
தழைக்கும்!
அது போன்றே-
நீயே!
துறவறத்தை -
வாழ்வாக்காதவனே!
வாழ்வினுள்ளே-
துறவறத்தை-
வைத்தவனே!
"படைப்புகளை"-
தவிர்த்து-
படைத்தவனை-
வணங்கிட சொன்னவனே!
ஒரு நாளைக்கு-
இருபத்து நான்கு மணி நேரம்-
வைத்தவனே!
ஐந்து நேர வணக்கத்தை-
கடமையாக்கியவனே!
ஐந்து நேரத்திற்கு ஆகும்-
நேரம்-ஐம்பது நிமிடம்தானே!
வருடத்தில் பதினோரு மாதம்-
"நல்லவற்றை புசியுங்கள்"-
என்றவனே!
ஒரு மாதகாலம்-
மட்டும் -
குறிப்பிட்ட நேரத்திற்கு-
தடை விதித்தவனே!
வட்டியை தடுத்தவனே!
வியாபாரத்தை-
ஆகுமாக்கியவனே!
"இருப்பதில்" சிறிதளவு-
"இல்லாதவர்களுக்கு"-
கொடுப்பது கடமை என்றவனே!
பொருளாதார வசதி-
இருக்குமேயானால்-
புனித யாத்திரை-
மேற்கொள்ள சொன்னவனே!
குறிப்பிட்டு-
ஒதுக்கிய நேரங்களும்!
குறிப்பிட்ட கால-
"ஒதுங்கல்"களும்!
குறிப்பிட்ட அளவு-
கொடுப்பதுவும்!
குறிப்பிட்ட அளவுக்கு மேல்-
இருக்கும்போது-
குறிப்பிட்ட இடத்திற்கு-
செல்வதுவும்!
வாழ்வையே-
துறக்கவில்லை!
வாழ்வினுள்ளே-
துறவு நிலை!
துறவு நிலையவும்-
இலகுவாக்கிய-
இறைவா !
இது உன் -
வரமே!
கடலை மையாகவும்-
மரங்களை எழுது கோலாகவும்-
ஆக்கினாலும்- உன்
கண்ணியத்தை எழுதிட முடியாதன-
சொன்னவனே!
நான்-
என்னத்த எழுதிட முடியும்-
இந்த "அற்ப"துளியில்-
வந்தவனே......!!
ப்ரியமுடன்-
சீனி ஷா.
நல்ல சிந்தனை.
பதிலளிநீக்குசகோதர மதத்தைச் சார்ந்தவர்களுக்கும்
நம் மார்க்கத்து மகிமையை
எளிமையாக புரியவைக்கும் வரிகள்.
nantri!
நீக்குasarath!