பல காலம் ஒப்பற்ற ஒப்பிலானில் ஜமாத் தலைவராக இருந்து மறைந்த ஜனாப் N.U.யாசீன் அவர்கள் மறைந்ததும் அவர்களின் மீது ஒரு இரங்கற் பாடல் இயற்றுமாறு ஒப்பிலான் அல்முபீன் தப்ஸ் குழு பாடகர் செய்யது அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அடியேன் இயற்றி பல நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பாடப்பட்டு வருகிற ஒரு பாடல்..
பாடலை வாசிக்கும் முன் ஒரு நபிமொழியை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.
மாவட்ட அளவில் மார்க்க போட்டி விழாவின் போது... |
''உங்களில் மறைந்தோரின் நல்லவைகளைப் போற்றுங்கள். தீயவற்றை விமர்சிக்காதீர்கள். அவர்களின் செயல்கள் குறித்து நீங்கள் விசாரிக்கப்படமாட்டீர்கள்''.
முத்துக்கு முத்தாக..
அன்புக்கு
அன்பாக
பண்புக்கு
பண்பாக
பாசமுள்ள
தலைவர் எங்கள் யாசீன்
வந்தாக!
பாங்கான
மக்களுக்கெல்லாம் நல்வழி
தந்தாக!
(அன்புக்கு அன்பாக)
போதைகளை
ஒழித்துக் கட்ட
பாதைகளை
அமைத்தவரே!
புர்காவை
போடவைத்து
புண்ணியங்கள்
சேர்த்தவரே!
சீரழிவைப்
பார்த்துவிட்டால்
சீறுகிற
சிங்கமடா!
ஏழைகளை
வாழவைக்கும்
ஏற்றமுள்ள
தங்கமடா!!
(அன்புக்கு அன்பாக)
ஊராரும்
மறக்கவில்லை
உற்றாரும்
வெறுக்கவில்லை
உம்போன்ற
தலைவர் இங்கே
எப்போதும்
பிறக்கவில்லை
நீர்
போட்ட சட்டங்களால்
மது
பாட்டில் திறக்கவில்லை
உம்
ஆட்சி இல்லாமல்
ஊர்
இன்று சிறக்கவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்