வறுமையானவர்கள்!
செழுமையானவர்கள்!
பங்களாவாசிகள்!
பரதேசிகள்!
கல்விமான்கள்!
கல்லாதவர்கள்!
நியாயத்திற்காக -
செத்தவர்கள்!
நியாயத்தை-
சாகடித்தவர்கள்!
வள்ளல்கள்!
வழங்காதவர்கள்!
உத்தமர்கள்!
ஊதாரிகள்!
எழுதி -
எழுச்சி பெற-
செய்தவர்கள்!
எழுத்தில்-
விஷ அம்பை-
எய்தவர்கள்!
பொன்னானவர்கள்!
மண்ணா போனவர்கள்!
ஆண்ட மக்கள்!
அடிமை மக்கள்!
ரத்தம் பார்த்து-
துடித்தவர்கள்!
ரத்தம் பார்க்க-
துடிப்பவர்கள்!
பேச்சில் -
விளாசியவர்கள்!
"விளாசியதில்"-
மூச்சை நிறுத்தியவர்கள்!
மலை போல்-
நிமிர்ந்தவர்கள்!
மழை போல்-
விழுந்தவர்கள்!
பசிக்கு-
புசித்தவர்கள்!
புசிக்கவே-
சுவாசிக்கிறவர்கள்!
எத்தனை பேர்-
வரவு!
அத்தனை பேரும்-
செலவு!
"போனவர்கள்"-
வந்தவர்கள்!
"போக போகிறவர்கள்"-
"இருக்கிறவர்கள்"!
"வர போகிறவர்களும்"-
"போகிறவர்கள்"!
மண்ணிலிருக்கும்-
நீர் ஆவியாகிறது!
விண்ணிலிருந்து-
அதுவே-
மழையாகிறது!
இது ஒரு-
சுழற்சி முறை!
நல்லதும்-
கேட்டதும்-
தலை தூக்குவது-
உலகின் நிலை!
இன்று-
கருதிடபடுகிறார்கள்!
"இப்படிதான்"-
வாழனும் -என்பவர்கள்!
அறிவீனர்களாக!
"எப்படியோ"-
வாழ்ந்தால் சரி-என்பவர்கள்
அறிவாளிகளாக!
ஒண்ணுதான்-
நகர பேருந்தும்!
நம் வாழ்வும்!
"எங்கிருந்து புறப்பட்டோமோ"-
"அங்கேயே சேர்கிறோம்!"
பரிசோதனையாளர்-
சோதிக்கையில்-தெரியும்!
யாரிடம் பயண சீட்டு-
இல்லை- என்று!
இறப்புக்கு பின்தான்-
தெரியும்-
யார் "வாழ்ந்தது"-
சிறப்பு -என்று!
ப்ரியமுடன்-
சீனி ஷா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்