பார்த்து-
பார்த்து!
பேசி-
பேசி!
பழகி-
பழகி!
தெருவுல போறவங்க-
பழகுறத-
பார்க்க-
பார்க்க!
புறம் பேச-
பேச!
"இவர்கள்"-
பேசியதும்-
முடியல!
பழகியதும்-
முடிக்கல!
"எல்லை"எதுதானும்-
தெரியல!
இரவிலும்-
கை பேசி!
விடிந்து-
இருட்டும் -
வரைக்கும்-
கை பேசி!
ஏற்றிய பணமும்-
தீர்ந்தது-
பேசி பேசி!
இருட்டு-
பகலாகியது!
பகல் இன்னும்-
பிரகாசம் ஆகியது!
நேரமும் காலமும்-
பாழாகியது!
செய்யும் காரியங்களை-
தள்ளி போடுபவன்-
மனிதனே!
கால நேரத்தோட-
செய்வது-
இயற்கையே!
உதிர்ந்த-
இலைகள்!
முளைபிக்க ஆரம்பித்தது-
கிளைகள்!
நாட்கள்-
நகர்ந்தது!
காலங்கள்-
கடந்தது!
அதே-
பூங்காவும்!
அதே-
காய்களும்-
கனிகளும்!
மாறாத-
மரங்கள்!
மாறிய-
மனிதர்கள்!
சந்திப்பு-
எதிர்பாராதது!
சந்தித்தது-
"அந்த"இருவர்!
அதே-
ஜோடி!
செல்கிறார்கள்-
கண்டுகொள்ளாதபடி!
அப்பெண்-
அவள் மணாளனுடன்!
அவன்-
அவனது மணாளியுடன்!
நின்றே இருந்த-
மரங்கள்!
கோபத்தில் கொட்டிய-
சில வார்த்தைகள்!
ஓ!
மானுடமே!
உண்மையை விளங்கிடனும்-
உன் மனமே!
ஷாஜகான்-
மனைவி பதினாலாவது-
பிரசவத்தில்-இறந்தாள்!
அவன் உள்ளம்-
வெதும்பியது -
பிரிந்ததால்-
பிரியத்தால்!
அங்கே -
அவன் கொண்ட-
நேசம் உண்மை!
தேசத்தின் மீது -
வைத்த பாசம்-
உண்மை!
எழுப்பினான்-
நேசத்தை-
கட்டிடமாக!
மண்ணில் நிலவொளியின்-
வண்ணமாக!
மன்னன் கொண்டது-
உண்மை காதல்!
இன்றோ-
"பெரும்பாலோர்"கொள்வது-
"பச்சையான" ஊடல்!
உங்கள்-
"ஆசையான"-
விருப்பத்திற்கு!
ஏன் இழுக்குறீர்கள்-
"அந்த தம்பதிகள் போல்"-
நாம் என பேசி-
வம்பிற்கு!?
ப்ரியமுடன்-
சீனி ஷா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்