புதியவை

வியாழன், 12 ஜூலை, 2012

காதலா..!? காதலா..!?



பார்த்து-
பார்த்து!

பேசி-
பேசி!

பழகி-
பழகி!


தெருவுல போறவங்க-
பழகுறத-
பார்க்க-
பார்க்க!

புறம் பேச-
பேச!

"இவர்கள்"-
பேசியதும்-
முடியல!

பழகியதும்-
முடிக்கல!

"எல்லை"எதுதானும்-
தெரியல!

இரவிலும்-
கை பேசி!

விடிந்து-
இருட்டும் -
வரைக்கும்-
கை பேசி!

ஏற்றிய பணமும்-
தீர்ந்தது-
பேசி பேசி!

இருட்டு-
பகலாகியது!

பகல் இன்னும்-
பிரகாசம் ஆகியது!

நேரமும் காலமும்-
பாழாகியது!

செய்யும் காரியங்களை-
தள்ளி போடுபவன்-
மனிதனே!

கால நேரத்தோட-
செய்வது-
இயற்கையே!

உதிர்ந்த-
இலைகள்!

முளைபிக்க ஆரம்பித்தது-
கிளைகள்!

நாட்கள்-
நகர்ந்தது!

காலங்கள்-
கடந்தது!

அதே-
பூங்காவும்!

அதே-
காய்களும்-
கனிகளும்!

மாறாத-
மரங்கள்!

மாறிய-
மனிதர்கள்!

சந்திப்பு-
எதிர்பாராதது!

சந்தித்தது-
"அந்த"இருவர்!

அதே-
ஜோடி!

செல்கிறார்கள்-
கண்டுகொள்ளாதபடி!

அப்பெண்-
அவள் மணாளனுடன்!

அவன்-
அவனது மணாளியுடன்!

நின்றே இருந்த-
மரங்கள்!

கோபத்தில் கொட்டிய-
சில வார்த்தைகள்!

ஓ!

மானுடமே!

உண்மையை விளங்கிடனும்-
உன் மனமே!

ஷாஜகான்-
மனைவி பதினாலாவது-
பிரசவத்தில்-இறந்தாள்!

அவன் உள்ளம்-
வெதும்பியது -
பிரிந்ததால்-
பிரியத்தால்!

அங்கே -
அவன் கொண்ட-
நேசம் உண்மை!

தேசத்தின் மீது -
வைத்த பாசம்-
உண்மை!

எழுப்பினான்-
நேசத்தை-
கட்டிடமாக!

மண்ணில் நிலவொளியின்-
வண்ணமாக!

மன்னன் கொண்டது-
உண்மை காதல்!

இன்றோ-
"பெரும்பாலோர்"கொள்வது-
"பச்சையான" ஊடல்!

உங்கள்-
"ஆசையான"-
விருப்பத்திற்கு!

ஏன் இழுக்குறீர்கள்-
"அந்த தம்பதிகள் போல்"-
நாம் என பேசி-
வம்பிற்கு!?

ப்ரியமுடன்-
சீனி ஷா.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்