சிரிப்பதும்-
அழுவதும்!
அழுவதற்கு முன்-
சிணுங்குவதும்!
தூக்கிட அழைத்திடும்போது-
தாயோட ஒட்டிகொள்வதும்!
அவசரகதியில் செல்லும்போது-
தூக்கிட சொல்லி-
கை அழைக்கும்போது!
பிஞ்சு விரல்களால்-
உன் தலையை -
சொரிந்து கொள்வதும்!
அவ்விரல்கள் கொண்டு-
என்தலையில்-நீ!
அடிப்பதுவும்!
என் தாயிக்கு வலிப்பதுபோல்-
உன் கையில் செல்லமாய்-
அடிப்பதுவும்!
"பெருசு"களின் -
கவலைகளை -
மொக்கை வாய் சிரிப்பிலே-
போக்குவதும்!
மடித்த ஆடைகளை-
கலைத்து போடுவதும்!
விளையாட்டு பொருட்களை-
உடைத்திடுவதும்!
நீ!
வாய் பேசிட சப்தம்-
எழுப்பிடும்போதும்!
உறவுகள் ஒவ்வொருவரும்-
"தன்னை" அழைத்ததாக-
எண்ணி கொள்வதும்!
உன்னை குளிக்க வைக்க-
நீ!- குடும்பத்தையே-
நனைந்திட வைப்பதுவும்!
உன்-
அப்பனாவது பரவாயில்லை-
உன்னை விட!
என்னை குழந்தையின்போது-
குளிக்க வைத்த ஆச்சா(பாட்டி)-
சொல்லி விட!
உன் சேட்டையோ-
என் சேட்டையை மிஞ்சி விட!
"கூடுதலா" மரியாதை-
கிடைத்து விட!
சிறுமகிழ்வு-
என் மனதோட!
என் எண்ணங்களின்-
எழுத்தை கவிதை என்கிறார்கள்!
பெருந்தன்மையாக-
பெரிய மனதுடையவர்கள்!
மழலைகளே-
உங்களது அசைவுகளெல்லாம்-
மொழி பெயர்த்திட முடியாத-
கவிதைகளாக தெரிகிறீர்கள்!
ப்ரியமுடன்-
சீனி ஷா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்