இரும்பே -
இத்து போகும்-
துருபிடித்து!
அத்தனை வலிமை -
கொண்டது-
கடல் காத்து!
வாட்டும் குளிரில்-
வாடியதுண்டா!?
கொல்லும் வெயிலில்-
செத்ததுண்டா!?
இதனை அனுபவிக்க-
மீனவனா வாழ-
உங்களுக்கு தைரியம்-
உண்டா!?
கடலை விட்டு-
வெளியே வந்து-
காய்ந்தால்தான் -
கருவாடாகும் -
மீன்கள்!
கடலுக்கு மேலேயே-
காய்ந்து கருவாடாகுபவர்கள்-
மீனவர்கள்!
அலைகளில் -
அசைந்தாடும்-
படகுகள்!
கடல் நீரில்-
மிதக்கும்-
"போயாக்கள்"!
நீருக்குள்-
விரித்து இருக்கும்-
வலைகள்!
பார்த்ததுண்டா!,?-
கரை ஒதுங்கையில்-
"மடி"அறுந்து-
என் மீனவர்கள் படும்-
அவதியை!
ஆனாலும் -
மறந்தும் -
காட்டி கொள்ளமாட்டார்கள்-
கண்ணீரை!
கரை சேராதவர்கள்-
எத்தனை பேர்!?
"கரை" ஏறாத -
குமருகள் எத்தனை-
பேர்!?
தாய் மடி-
எல்லோருக்கும்-
கிடைக்கும்-
அரியணை!
அரிதாகிவிட்டதே-
கண்டிட-
அரியணையை -
அரவணைக்கும் -
மகன் -மகளை!
முள்ளில்லாத மீனை-
தின்ன ஆசைபடுகிறோம்!
முதுகு எழும்பு-
ஒடிய கரை வலை-
இழுக்கும் -மக்களின்
வலியை-எத்தனை பேர்
உணர்ந்தோம்!?
மீனவனின்-
வேதனையை -
வார்த்தையில்-
வடித்திட முடியாது!
சொற்களிலும்-
சுருக்கிட முடியாது!
(நம் முன்னோர்களான மீனவ மக்களுக்கும்-
நம் சகோதரர்களான வாலிநோக்க மக்களுக்கும் மற்றும் மீனவ மக்களுக்கு
இக்கவிதை அர்ப்பணம்)
ப்ரியமுடன்-
சீனி ஷா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்