புதியவை

வெள்ளி, 22 ஜூன், 2012

மீனவன்!



இரும்பே -
இத்து போகும்-
துருபிடித்து!

அத்தனை வலிமை -
கொண்டது-
கடல் காத்து!

வாட்டும் குளிரில்-
வாடியதுண்டா!?

கொல்லும் வெயிலில்-
செத்ததுண்டா!?

இதனை அனுபவிக்க-
மீனவனா வாழ-
உங்களுக்கு தைரியம்-
உண்டா!?

கடலை விட்டு-
வெளியே வந்து-
காய்ந்தால்தான் -
கருவாடாகும் -
மீன்கள்!

கடலுக்கு மேலேயே-
காய்ந்து கருவாடாகுபவர்கள்-
மீனவர்கள்!

அலைகளில் -
அசைந்தாடும்-
படகுகள்!

கடல் நீரில்-
மிதக்கும்-
"போயாக்கள்"!

நீருக்குள்-
விரித்து இருக்கும்-
வலைகள்!

பார்த்ததுண்டா!,?-
கரை ஒதுங்கையில்-
"மடி"அறுந்து-
என் மீனவர்கள் படும்-
அவதியை!

ஆனாலும் -
மறந்தும் -
காட்டி கொள்ளமாட்டார்கள்-
கண்ணீரை!

கரை சேராதவர்கள்-
எத்தனை பேர்!?

"கரை" ஏறாத -
குமருகள் எத்தனை-
பேர்!?

தாய் மடி-
எல்லோருக்கும்-
கிடைக்கும்-
அரியணை!

அரிதாகிவிட்டதே-
கண்டிட-
அரியணையை -
அரவணைக்கும் -
மகன் -மகளை!

முள்ளில்லாத மீனை-
தின்ன ஆசைபடுகிறோம்!

முதுகு எழும்பு-
ஒடிய கரை வலை-
இழுக்கும் -மக்களின்
வலியை-எத்தனை பேர்
உணர்ந்தோம்!?

மீனவனின்-
வேதனையை -
வார்த்தையில்-
வடித்திட முடியாது!

சொற்களிலும்-
சுருக்கிட முடியாது!

(நம் முன்னோர்களான மீனவ மக்களுக்கும்-
நம் சகோதரர்களான வாலிநோக்க மக்களுக்கும் மற்றும் மீனவ மக்களுக்கு
இக்கவிதை அர்ப்பணம்)


ப்ரியமுடன்-
சீனி ஷா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்