![]() |
சூலியா பள்ளி- சிங்கை |
அல்லாஹ் அக்பர்!
அல்லாஹ் அக்பர்!
பாங்கின் சப்தம்!
உலகினை தவறாமல்-
எழுப்பும்!
பர பரப்பான-
பாருலகம் இது!
பக்குவபட்டிட-
அழைக்கும்-
பாங்கான பாங்கு-
இது!
ஆளுபவனும்-
ஆளபடுபவனும்-
வேறுபாடு இங்கில்லே!
நின்றிட வேண்டுமே-
ஒரே வரிசையிலே!
இதே சட்டம்தானே-
அனைத்து பள்ளிகளிலே!
"அடிமை" பிலாலாக-
இருந்தாரே!
பிலால்(ரலி) யாக-
ஆனாரே!
கலிமா சொன்ன -
மாத்திரத்திலே!
ஒழிந்தது இங்கே-
"அடிமை" என்ற சொல்லே!
இலவச காலனி-
கொடுக்கும் -
அரசுகளே!
தாழ்த்தப்பட்ட-
மக்களை -
உயர்சாதி-
தடுக்குதே!
தொப்புள் கோடி-
அறுப்பு -முழு குழந்தையை
வெளியேற்றவே!
தாய் -பிள்ளை-
உறவை துண்டிக்க-
இல்லையே!
நாம் பிறந்த -
ஊரான பள்ளியை-
விட்டு!
வாழ்கிறோம்-
பொழைக்க போன-
இடத்தில பள்ளியை-
தொடர்பு கொண்டு!
அதுபோலவே-
சிங்கையில் நம்-
முன்னோர்களும்!
இளையர்களும்!
சூலியா பள்ளியே-
நம்மை இணைக்கும்-
பாலம்!
இப்பள்ளி சிங்கையில்-
நினைவு சின்னமாகும்!
பட்டாம் பூச்சிகளின்-
கூடாரம்!
பறவைகளின்-
சரணாலயம்!
பெருநாட்களில்-
ஊரில் இருப்பதாகவே-
நினைப்பும் வரும்!
நோன்புகால -
திராவியாக்களுக்கும்-
இஹ்திகாப் இருக்கவும்-
நம் மக்கள் அதிகம்-
இருக்கும் இடம்!
யா அல்லாஹ்!
உன் வீடுகளாகும்-
பள்ளிகளெல்லாம்!
உனது அருளில்-
புகுதிடுவாயாக-
எங்களை எல்லாம்!
ப்ரியமுடன்-
சீனி ஷா.
maasha allah!
பதிலளிநீக்குazhakiya padam!
nantri asarath!