புதியவை

திங்கள், 25 ஜூன், 2012

சூலியா பள்ளியும்- நம் மக்களும்...

சூலியா பள்ளி- சிங்கை

அல்லாஹ் அக்பர்!
அல்லாஹ் அக்பர்!
பாங்கின் சப்தம்!

உலகினை தவறாமல்-
எழுப்பும்!

பர பரப்பான-
பாருலகம் இது!

பக்குவபட்டிட-
அழைக்கும்-
பாங்கான பாங்கு-
இது!

ஆளுபவனும்-
ஆளபடுபவனும்-
வேறுபாடு இங்கில்லே!

நின்றிட வேண்டுமே-
ஒரே வரிசையிலே!

இதே சட்டம்தானே-
அனைத்து பள்ளிகளிலே!

"அடிமை" பிலாலாக-
இருந்தாரே!

பிலால்(ரலி) யாக-
ஆனாரே!

கலிமா சொன்ன -
மாத்திரத்திலே!

ஒழிந்தது இங்கே-
"அடிமை" என்ற சொல்லே!

இலவச காலனி-
கொடுக்கும் -
அரசுகளே!

தாழ்த்தப்பட்ட-
மக்களை -
உயர்சாதி-
தடுக்குதே!

தொப்புள் கோடி-
அறுப்பு -முழு குழந்தையை
வெளியேற்றவே!

தாய் -பிள்ளை-
உறவை துண்டிக்க-
இல்லையே!

நாம் பிறந்த -
ஊரான பள்ளியை-
விட்டு!

வாழ்கிறோம்-
பொழைக்க போன-
இடத்தில பள்ளியை-
தொடர்பு கொண்டு!

அதுபோலவே-
சிங்கையில் நம்-
முன்னோர்களும்!
இளையர்களும்!

சூலியா பள்ளியே-
நம்மை இணைக்கும்-
பாலம்!

இப்பள்ளி சிங்கையில்-
நினைவு சின்னமாகும்!

பட்டாம் பூச்சிகளின்-
கூடாரம்!

பறவைகளின்-
சரணாலயம்!

பெருநாட்களில்-
ஊரில் இருப்பதாகவே-
நினைப்பும் வரும்!

நோன்புகால -
திராவியாக்களுக்கும்-
இஹ்திகாப் இருக்கவும்-
நம் மக்கள் அதிகம்-
இருக்கும் இடம்!

யா அல்லாஹ்!

உன் வீடுகளாகும்-
பள்ளிகளெல்லாம்!

உனது அருளில்-
புகுதிடுவாயாக-
எங்களை எல்லாம்!

ப்ரியமுடன்-
சீனி ஷா.

1 கருத்து:

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்