புதியவை

சனி, 30 ஜூன், 2012

 விறகு சுமப்பவளே....



பொடி சுள்ளிகளையும்!
விறகு கட்டுகளையும்-
சுமப்பவளே!

உன் "சுமையை"-
மாத்திடதான்-
ஒரு நாதியும் இல்ல!

உச்சந்தலையை-
அழுத்தாம இருக்க-
"சும்மாடு"- துண்டு-
தலைக்கு!

உன் மன அழுத்தத்தை-
குறைக்க ஏதும்-
வழி இருக்கு!?

"மணந்தவனோ"-
மானங்கெட்ட மது-
மயக்கத்திலே!

மனசே இல்லாதவங்க-
டாஸ் மாக்கை திறக்குறவங்க-
ஆட்சியிலே!

நீ!
விறகு பொறக்குறது-
அடுப்பு எரிய!

மின்சாரமே கனவு-
போல வருமா?-தெரியல
விளக்கு எரிய!

இல்லை மின்சாரம்-
மின் பொருட்கள்-
இலவசம்!

உறங்க முடியாது-
உண்ணாம -
உணவு பொருளை-
வாங்குனால் !-
போகணும் பரதேசம்!

வேகமா விறகுகளை-
கட்டி விடு!

அதிகாரி கண்ணில்-
படாமல்-
சென்று விடு!

வனத்துறை அதிகாரி-
பார்ப்பாரேயானால்-
உனது ஆயுதத்தை-
பறிமுதல் செய்து-
விடுவார்!

"பேரழிவு"ஆயுதம் என-
வழக்கும் போட்டிடுவார்!

"மொட்டை" அருவா-
ஒரே சொத்து-
உனக்கு!

அதிகாரிக்கோ-
பதிந்து விட்டதில் சந்தோசம்-
ஒரு வழக்கு!


ஒருவன் ஹீரோ ஆக-
ஒருவனை வில்லன் வேஷம்-
போடுவது போல!

அதிகாரிகள்-
மெடல்கள் வாங்க-
அப்பாவிகளை சுட்டு விட்டு-
தீவிர வாதி என-
சொல்வது போல!

ஏழை தாயே-
உன் "நிலை" மாறும்-
ஒரு நாள்-உன்
மகனால்!

நம் தாய்நாட்டிலும்-
போலி வேசதாரிகள்-
முகதிரை கிழியும்-
ஒரு நாள் வரும்-
வளரும்தலைமுறையால்!!!

ப்ரியமுடன்-
சீனி ஷா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்