புதியவை

செவ்வாய், 5 மார்ச், 2013

சிங்கை வாழ் ஒப்பிலான் உறவுகளே!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)

எனதருமை ..!
சிங்கை வாழ் ஒப்பிலான் உறவுகளே!
நமது ஊரின் வலைத்தளம் (oppilan.blogspot.com)இருப்பது நீங்கள் அறிந்ததே .அது நமது சொந்தங்களுக்கு நமது சந்தோஷ நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை பகிர்ந்தளிக்கவே அந்த வலைத்தளம்.அசரத் சதக் மஸ்லஹி  அவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டது.
ஆதலால் நமது சிங்கை வாழ் சொந்தங்கள் உங்களது கல்யாணம். மற்றும் நீங்கள் விரும்பி வெளியிட இருப்பவைகளை எனக்கு பேஷ்புக்கில் தகவல் (பெயர்-இடம்-தேதி-பத்திரிகை நகல்)அனுப்பினால் நான் வெளியிடுகிறேன்.
நம் ஊர் வலைதளத்திற்கு எனக்கும் போஸ்ட் செய்வதற்கு அனுமதித்துள்ளார்கள்!

எனக்கு பெரும்பாலும் நமது சிங்கையில் நடைபெறும் நிகழ்சிகள் எனக்கு தெரிந்திட வாய்ப்பும் குறைவு.
அறிந்தாலும் வேலை நிமித்தமாக மறந்தும் போய்கிறேன்!

இன்ஷா அல்லாஹ்!
வரும்காலங்களில் முயற்சிப்போம்.
நம் சுக துக்கங்களை சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்ள இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்வோம்!
எந்த செலவும் இல்லாமல் உலகம் முழுக்க இணையம் வாயிலாக அறிய செய்திடலாம்.

சிங்கை வாழ் நமது ஊர் மக்கள் செய்திகளை மட்டும் எனக்கு தெரியபடுத்துங்கள்!

நமது ஊர் ஒப்பிலான் நிகழ்வுகளை
அசரத் சதக் அவர்களிடம் தெரியபடுத்தவும்.

தெரியாமல் இருந்தால் அவர்களிடம்.
இவ்விசயத்தை சொல்லுங்கள்.

வஸ்ஸலாம்.
ப்ரியமுடன்-
சீனி ஷா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்