ஒப்பிலானுக்கு வந்து மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார் ஒரு தொழுகை அழைப்பாளர்.
((المؤذنون أطول الناس أعناقاً يوم القيامة)) رواه مسلم
நபி (ஸல்) கூறினார்கள்:
நாளை மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் (முஅத்தின்கள்) காணப்படுவார்கள்.’' ( நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-631)
மறுமையில் அவர்களுக்கு வழங்கப்படும் மலைபோன்ற நன்மைகள் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு இருக்கும். அதை அவர்கள் எட்டி எட்டி பார்ப்பர்கள் இந்த நிலையைத்தான் கழுத்து நீண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்பொழுது நம் ஊரில் பணிசெய்துகொண்டிருக்கும் முஅத்தினுக்கு எட்டி எட்டிப் பார்க்கவேண்டிய கஷ்டமெல்லாம் இருக்காது என்று நினைக்கிறேன். ஆல்ரெடி கழுத்து நீளம்தான்.
யார் அவர்? கொஞ்சம் யோசியுங்கள் பார்க்கலாம். அட.. நீங்க நெனச்சது சரிதான்..ஏறகனவே இருந்துவிட்டு சிங்கை சென்று மீண்டும் வந்திருக்கிற அதே முஸ்தகீம்தான். நூருல் முஸ்தகீம்.
ஒப்பிலானிலேயே இப்பொழுது இவரது உயரத்திற்கு ஆள் கிடையாது.
பாங்கு சொல்லும் மைக் ஸ்டாண்டை முழுவதுமாக உயர்த்திய பிறகும் சற்று குனிந்துகொண்டுதான் இவர் பாங்கு சொல்லவேண்டியுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். உயரமாக இருப்பதினால் சுவரில் இருக்கும் பள்ளியை சுலபமாக அடிப்பதில் வல்லவர். ஆனால் குணத்தால் ரொம்ப நல்லவர்.
unmai aanal sirippaka ullathu......,
பதிலளிநீக்குok thanks.
நீக்கு