நாம-
பொறந்த -
மண்ணு!
மறக்க முடியாத-
ஒன்னு!
பொசுக்கிய-
வெயிலுண்டு!
பூசி கொண்ட-
புழுதிகள்-
உண்டு!
ஊரின்-
நினைவுகள்-
நெஞ்சோடு-
உண்டு!
கடலில்-
'பொருள்'-
தேடினார்கள்!
கடல் தாண்டியும்-
'பொருள்'-
தேடுபவர்கள்!
எங்கே சென்றாலும்-
பொறந்த மண்ணின்-
வாசத்தை-
மறக்காதவர்கள்!
அலைகளை-
எதிர்த்து-
மீன் பிடித்தவர்கள்-
எம் மூத்தவர்கள்!
எதிர்ப்புகளை-
கடந்து -
சாதிக்க முயல்பவர்கள்-
இளம்பட்டதாரிகள்!
நல்ல காரியம்-
அழைத்தால்-
சடைப்புகள் உண்டு!
இறப்பு செய்தி என்றால்-
பகமைதனை மறந்து-
பங்கு பெறுவோர்-
உண்டு!
தன் பசியை மட்டும்-
போக்கி கொள்வோர்-
உலகில் உண்டு!
மற்றவர்கள்-
பசியை போக்க-
முயலும் -
இளைஞர் பட்டாளமும்-
உண்டு!
நம்ம ஊரு என-
'ஒடுங்கி'கொள்ளாமல்-
மற்ற ஊர்மக்களுக்கும்-
'சுன்னத்' செய்பவர்களும்-
உண்டு!
ஒவ்வொரு ஊருக்கும்-
ஒரு வரலாறு-
உண்டு!
மனிதர்களில்-
சிலரே-
வரலாறில்-
இடம்பெறுவதுண்டு!
அந்த-
வரிசையில்-
நால்வர்!
நமதூர்-
தலைவர்கள்!
யாசின் அவர்கள்!
சீனி முசாபார் அவர்கள்!
சீனி மைதீன் அவர்கள்!
காஜா மைதீன் அவர்கள்!
மண்ணின் மைந்தர்கள் -
மண்ணுலகில் இல்லை!
நம் மனங்களை விட்டு-
அகல வில்லை!
நாட்டின் நீண்ட கால-
திட்டம்!
சேது சமுத்திர-
திட்டம்!
இத்திட்டத்தால்-
இலங்கைக்கே-
நட்டம்!
நம்ம நாட்டிலேயே-
எதிர்ப்பு என்பதே-
துரதிர்ஷ்டம்!
எமது!
உயிரின் உறவுகளே!
நமக்கும் கனவுகள்-
உள்ளது !
நிறைவேற்றபட-
வேண்டியது!
நிறைவேற-
கூடியது!
ஆம்!
புது பள்ளி வாசல் -
கட்ட வேண்டியவர்கள்-
நாம்!
ஒரு நாள்-
நம் எண்ணங்கள்-
நிறைவேறும்!
இறைவன் -
நாடுவான்!
புதிய பள்ளியை -
நாம் எழுப்புவோம்!
இன்ஷா அல்லா.....
ப்ரியமுடன்!
சீனி ஷா.
அன்புள்ள சீனி..
பதிலளிநீக்குஇந்த மண்ணைப் பற்றியும்
மண்ணின் மைந்தர்கள் பற்றியும்
சுருக்கமாக எழுதினாலும்
உருக்கமாக எழுதி
உள்ளங்களைக் கொள்ளை கொண்டுவிட்டீர்கள். தொடருங்கள் உங்கள் பதிவுகளை..
maasha alla!
பதிலளிநீக்குnantri asarath!