மரத்துண்டுகள்!
ஓலை சுவடிகள்!
கல்வெட்டுகள்!
அழிந்த கட்டிடங்கள்!
சிற்பங்கள்!
சிதிலங்கள்!
இவைகள்-
அன்று-
சாதாரண நிகழ்வுகள்!
சாமானியனின்-
பதிவுகள்!
அவைகள்-
தீர்மானிப்பதே-
இன்றைய -
வரலாறுகள்!
இன்றைய -
நிகழ்வுதனை-
பதிகிறது-நம்முடைய
வலைப்பதிவுகள்!
இது-
நிர்மாணிப்பதே-
நாளைய-
வரலாறுகள்!
வாழ்ந்தவர்கள்-
எத்தனையோ!
மடிந்தவர்கள்-
எத்தனயோ!
நினைவு கூறபடுபவர்கள்-
எத்தனை பேரோ!?
உலகம்-
இலட்சியவாதிகளை-
இழக்கலாம்-
இலட்சியங்களை-
இழப்பதில்லை!
சிந்தனைவாதிகளை-
சீரழிக்கலாம்-
சிந்தனைகள்-
சீரழிவதில்லை!
எழுச்சியாளர்கள்-
இறக்கலாம்-
எழுச்சி-
மக்களை -
எழுப்பாமல் விடுவதில்லை!
"கருத்தை விதை"-என்ற
வார்தைதானாம்!
மருவி-
கவிதை-
என்றானதாம்!
கருத்தை விதைத்திருந்தால்-
நான் மனிதன்!
இல்லைஎன்றால்-
ஒரு அற்பன்!
என்றுமே -
நான்!
அற்பன் என்ற -
நிலையிலிருந்து-
மனிதனாக -
முயல்பவன்!
ப்ரியமுடன்-
சீனி ஷா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்