"அகிம்சை" பிறந்த-
மாநிலம்!
"இம்சை"ஆளும்-
செந்நிலம்!
மிருக வேட்டைக்கு-
எத்தனையோ தண்டனைகள்!
மனித வேட்டைக்கு பின்னும்-
மௌனிக்கும்-
நீதிமன்றங்கள்!
இதில்-
மத நல்லிணக்க-
உண்ணாவிரத நாடகங்கள்!
ஒரு "ஆகாசவாணி"-
ஊழலுக்கு எதிரா-
யாத்திரை கிளம்பினாரு!
லாவகமா-
கர்நாடக பாதையை-
மறந்துட்டாரு!
அதிகாரிகளால்-
சூறையாட பட்ட-
இருளால சமூக-
சகோதரிகள்!
தண்டனை-
அபராதமாக-
ஐம்பதாயிரம்-
ரூபாய்கள்!
நடிகை பாலியல் தொந்தரவுக்கு-
உள்ளானதுக்கு-
வீடு முற்றுகை-
போராட்டமாம்!
இப்பெண்களின் நிலையை-
ஏன் மறந்தார்களாமாம்!
சுதந்திரம் கொண்டாடமாட்டார்கள்-
சிறுபான்மையினர்கள்-என
ஓலமிடும் ஒரு கூட்டம்!
வகுக்கப்டுது-
சுதந்திர தின அணி வகுப்பை-
தடுக்க போடும்-
திட்டம்!
ஒரு பக்கம்-
கொண்டாடலை -என
கூப்பாடு!
மறுபக்கம்-
கொண்டாட விடாம-
தடுக்கும் நிலைப்பாடு!
இம்மக்கள் -
என்ன செய்ய வேண்டும்-என்பது
இவர்களின் நிலைப்பாடு!?
முஸ்லிம் நாடுகள்-
விளையாட்டு போட்டிகளில்-
பெண்களை அனுமதிப்பதில்லை-என
பொய் குற்றச்சாட்டு!
அப்போட்டிகளில்-
ஒழுங்கான ஆடையுடன்-
கலந்து கொள்ள அனுமதிக்கிறது-
அந்நாடு!
ஒழுங்கான ஆடை-
பழமை வாதமாம்!
ஆடையை குறைக்க சொல்லி-
மார்பை காட்டி கொண்டு-
போராட்டமாம்!
ஓ!
அறிவு ஜீவுகளே!
ஆதிமனிதன்-
நிர்வாணமாக அலைந்தான்!
பின்புதான்-
நாகரீகமாக-
ஆடைதனை அணிந்தான்!
இன்னொரு போராட்டம்-
நடத்தலாம்!
எல்லோரும்-
சோறு சாப்பிடுகிறார்கள்-
என!
அதனை எதிர்த்து-
மலத்தை சாப்பிடுவோம்-
என...!!!
ப்ரியமுடன்-
சீனி ஷா.
வீறு நடை போடும் கவிதை ..
பதிலளிநீக்குஉங்களின் சமூக கோவம் எனக்கு புரிகின்றது .. நானும் உங்களின் ரசிகன் என்பதில் பெருமை அடைகிறேன் தோழரே ...
arase!
நீக்குmikka nantri!