புதியவை

சனி, 4 ஆகஸ்ட், 2012

போராட்டமாம் போராட்டம்.....



"அகிம்சை" பிறந்த-
மாநிலம்!

"இம்சை"ஆளும்-
செந்நிலம்!

மிருக வேட்டைக்கு-
எத்தனையோ தண்டனைகள்!

மனித வேட்டைக்கு பின்னும்-
மௌனிக்கும்-
நீதிமன்றங்கள்!

இதில்-
மத நல்லிணக்க-
உண்ணாவிரத நாடகங்கள்!

ஒரு "ஆகாசவாணி"-
ஊழலுக்கு எதிரா-
யாத்திரை கிளம்பினாரு!

லாவகமா-
கர்நாடக பாதையை-
மறந்துட்டாரு!

அதிகாரிகளால்-
சூறையாட பட்ட-
இருளால சமூக-
சகோதரிகள்!

தண்டனை-
அபராதமாக-
ஐம்பதாயிரம்-
ரூபாய்கள்!

நடிகை பாலியல் தொந்தரவுக்கு-
உள்ளானதுக்கு-
வீடு முற்றுகை-
போராட்டமாம்!

இப்பெண்களின் நிலையை-
ஏன் மறந்தார்களாமாம்!

சுதந்திரம் கொண்டாடமாட்டார்கள்-
சிறுபான்மையினர்கள்-என
ஓலமிடும் ஒரு கூட்டம்!

வகுக்கப்டுது-
சுதந்திர தின அணி வகுப்பை-
தடுக்க போடும்-
திட்டம்!

ஒரு பக்கம்-
கொண்டாடலை -என
கூப்பாடு!

மறுபக்கம்-
கொண்டாட விடாம-
தடுக்கும் நிலைப்பாடு!

இம்மக்கள் -
என்ன செய்ய வேண்டும்-என்பது
இவர்களின் நிலைப்பாடு!?

முஸ்லிம் நாடுகள்-
விளையாட்டு போட்டிகளில்-
பெண்களை அனுமதிப்பதில்லை-என
பொய் குற்றச்சாட்டு!

அப்போட்டிகளில்-
ஒழுங்கான ஆடையுடன்-
கலந்து கொள்ள அனுமதிக்கிறது-
அந்நாடு!

ஒழுங்கான ஆடை-
பழமை வாதமாம்!

ஆடையை குறைக்க சொல்லி-
மார்பை காட்டி கொண்டு-
போராட்டமாம்!

ஓ!

அறிவு ஜீவுகளே!

ஆதிமனிதன்-
நிர்வாணமாக அலைந்தான்!

பின்புதான்-
நாகரீகமாக-
ஆடைதனை அணிந்தான்!

இன்னொரு போராட்டம்-
நடத்தலாம்!

எல்லோரும்-
சோறு சாப்பிடுகிறார்கள்-
என!

அதனை எதிர்த்து-
மலத்தை சாப்பிடுவோம்-
என...!!!


ப்ரியமுடன்-
சீனி ஷா.

2 கருத்துகள்:

  1. வீறு நடை போடும் கவிதை ..
    உங்களின் சமூக கோவம் எனக்கு புரிகின்றது .. நானும் உங்களின் ரசிகன் என்பதில் பெருமை அடைகிறேன் தோழரே ...

    பதிலளிநீக்கு

பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்