கொட்டி கிடக்கும்-
விண் மீன்களே!
ஒத்தையாய் இருக்கும்-
வெண்ணிலவே!
இதுதான்-
விண்வெளியே!
சுற்றி கட்டி இருக்கும்-
நீள் குழல் விளக்கு!
சுற்றியவாறு இருக்கும்-
சிறு சிறு விளக்கு!
இருவகையும் உண்டு-
விசேசங்களுக்கு!
வறண்டு கிடக்கும்-
நிலங்களும் உண்டு!
வாட்டி கொல்லும்-
பனி பிரதேசங்களும்-
உண்டு!
இவ்விரண்டிலும்-
உயிர் வாழ்வதுண்டு!
கழுத்து வலிக்கும் அளவுக்கு-
உயர்ந்துள்ள -
மலைகளும் உண்டு!
வயிற்றில் புளியை-
கரைத்திடும்-
பாதாள பள்ளங்களும்-
உண்டு!
இதனை பார்த்து-
லயித்திடும்-
மனங்களும் உண்டு!
காலில் சொறி உள்ளதால்-
மயிலின் அழகு-
குறைந்ததா..!?
குயில் கருப்பு என்பதால்-
குரல்தான்-
கசந்ததா...!?
மானின் மேல் உள்ள-
புள்ளியால்-வனப்புக்கு-
கொள்ளியானதா...!?
ஒவ்வொன்றும்-
மாறுபட்ட அழகுதானே!?
மாசுபட்டதாக-
நமக்கு தெரியவில்லைதானே!?
மனித பிறவியே!
தோலின் நிறம்தான்-
அழகா!?
அழகு சாதனா பொருட்களினால்-
மெருகேரிடுவது
அழகா!?
இல்லவே !
இல்லை -
இதில் அழகு!
உண்மை-
அழகு!
மொழிந்திடும்-
வார்த்தையிலும்!
நடந்திடும்-
நடத்தையிலும்!
ப்ரியமுடன்-
சீனி ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டமே பதிவர்களை உற்சாகப்படுத்தும்